லைஃப்ஸ்டைல்

கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா

Published On 2019-03-29 06:40 GMT   |   Update On 2019-03-29 06:40 GMT
கேழ்வரகு மாவில் கூழ், அடை, புட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று கேழ்வரகு மாவில் பக்கோடா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

கேழ்வரகு மாவு - 1 கப்,
வேர்க்கடலை - 1/4 கப்,
மிளகாய்த்தூள் - 1 டேபிள்ஸ்பூன்,
முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை - தலா 1 கைப்பிடி,
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.



செய்முறை :


முருங்கைக்கீரை, கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, வேர்க்கடலை, மிளகாய்த்தூள், உப்பு, முருங்கைக்கீரை, கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கலந்த மாவில் சிறிது தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.

கடாயில் எண்ணெயை ஊற்றி சூடானதும் மாவை எடுத்து பக்கோடாவாக கிள்ளி போட்டு பொரித்தெடுத்து பரிமாறவும்.

சூப்பரான ஸ்நாக்ஸ் கேழ்வரகு முருங்கைக்கீரை பக்கோடா ரெடி.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்
Tags:    

Similar News