சமையல்
நார்ச்சத்து அதிகம் உள்ள வரகரிசி உப்புமா
வரகரிசி ரத்தத்தை தூய்மைப்படுத்துவதோடு, ரத்த ஓட்டத்தை சீராக்கும். அரிசி, கோதுமையைக் காட்டிலும் வரகில் நார்ச்சத்து மிகவும் அதிகம். மாவுச்சத்தும் குறைந்து இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.
தேவையான பொருட்கள் :
வரகரிசி - 1 கப்
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வரகரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
அடுத்து அதில் பெருங்காயத்தூள், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வரகரிசியை சேர்த்து கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
அரிசி நன்றாக வெந்ததும் வரும் போது உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாற வேண்டும்.
வரகரிசி - 1 கப்
வெங்காயம் - 2
ப.மிளகாய் - 2
கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு - தலா 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
பெருங்காயத்தூள் - சிறிதளவு
செய்முறை :
வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வரகரிசியை நன்றாக சுத்தம் செய்து கழுவி வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப்பருப்பு போட்டு நன்றாக வறுக்க வேண்டும்.
அடுத்து அதில் பெருங்காயத்தூள், வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
அடுத்து அதில் 3 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் வரகரிசியை சேர்த்து கிளற வேண்டும். அடுப்பை மிதமான தீயில் வைக்க வேண்டும்.
அரிசி நன்றாக வெந்ததும் வரும் போது உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாற வேண்டும்.
சத்தான வரகரிசி உப்புமா ரெடி.
இதையும் படிக்கலாம்..திருவாதிரைக் களி செய்வது எப்படி?