லைஃப்ஸ்டைல்

நினைவு திறனை அதிகரிக்கும் வல்லாரை கீரை சம்பல்

Published On 2019-05-31 05:01 GMT   |   Update On 2019-05-31 05:01 GMT
நினைவு திறனை அதிகப்படுத்தும் முக்கிய பங்கு வல்லாரை கீரைக்கு உண்டு. இன்று சத்தான வல்லாரை கீரை சம்பல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :

வல்லாரை கீரை - 1 கப்
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சம் பழம் - 1 / 2 மூடி
மிளகு தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு



செய்முறை :

வல்லாரை கீரையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

சின்ன வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வல்லாரை கீரையை போட்டு அதனுடன் நறுக்கிய சின்ன வெங்காயம், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

அதில் அரை மூடி எலுமிச்சம் பழத்தை பிழிந்து கொள்ளவும்.

கடைசியாக அதில் உப்பு, மிளகு தூள் தூவி 5 நிமிடம் கழித்து பரிமாறவும்.

சத்தான வல்லாரை கீரை சம்பல் ரெடி.

குறிப்பு:

உங்களுக்கு பிடித்தமான கீரை வகைகளையும் இது போல சாலட் ஆக செய்து உண்ணலாம்.

இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
Tags:    

Similar News