குழந்தை பராமரிப்பு

குழந்தைகள் பேச்சுக் குறைபாட்டிற்கான காரணங்களும்... தீர்வும்...

Published On 2023-03-01 09:48 IST   |   Update On 2023-03-01 09:48:00 IST
  • காது கேட்கும் திறன் குழந்தையின் பேச்சுக்கு மிக மிக முக்கியம்.
  • குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.

ஐம்புலன்களில் செவிக்கும் மூளைக்கும் வாய்க்கும் நிறைய தொடர்புகள் இருக்கின்றன. ஒரு குழந்தை தெளிவாகக் கேட்டால், அதை மூளை சரியாக கிரகித்தால் எது தெளிவான பேச்சாக வெளியே வரும். காது மந்தமாக இருந்தால் பேச்சில் குறைபாடு இருக்கும்.

ஒரு குழந்தை அம்மா என்ற ஒலியை காதில் உணர்ந்து, அந்த அதிர்வை மூளை வாங்கி, அந்த அதிர்வை தான் முதலில் 'அம்மா' என்று உணர்வை ஏற்படுத்தும். அதன் பின் அதை வார்த்தை வடிவில் அம்மா என்று அழைக்கும்.

அடுத்தது குழந்தையின் மூளையைத் தூண்டி, பேச வைக்க ஆள் இல்லாதது பேச்சுக் குறைபாட்டிற்கு ஒரு முக்கிய காரணம். குழந்தைகள் அருகில் அமர்ந்து பேசுவதற்கு அம்மா, அப்பா இருவருக்கும் இப்போது நேரம் இல்லை. தாத்தா, பாட்டி போன்ற உறவுகளும் அருகில் இல்லை. பிரச்சனைக்கான காரணத்தை சரிவரக் கண்டறிந்தால் தீர்ப்பது சுலபம்.

குழந்தைகள் பேச்சுக் குறைபாட்டிற்கான காரணங்கள்

ஒரு குழந்தையின் மொழித்தொடர்பில் வரும் (Language delay) தாமதம் தான் மொழித்தொடர்பு தாமதம் என்று அழைக்கப்படுகிறது. ஒரு குழந்தை தனது வயதிற்குத் தகுந்தாற்போல் வார்த்தைகளோ அல்லது வாக்கியங்களோ பேச இயலவில்லை என்றால் குறைபாடு இருக்கின்றது என்று அர்த்தம். குறைபாடுகளை ஆரம்பத்திலேயே கண்டறிவது மிகவும் அவசியம்.

குறைபாட்டிற்கான அறிகுறிகள்:

1. ஓரு குழந்தை 15 மாதத்திற்குள் வாய்க்குள் முணங்கவில்லை என்றால்.

2. 2 வயதிற்குள் சில நூறு வார்த்தைகள் பேசவில்லை என்றால்.

3. சின்ன சின்ன வாக்கியங்கள் 3 வயதிற்குள் பேசவில்லை என்றால்.

4. நீங்கள் கூறும் வார்த்தைகள் /கட்டளை களை பின்பற்ற இயலவில்லை என்றால்.

5. முறையான உச்சரிப்பு இல்லாமை

பேச்சு குறைபாட்டிற்கான காரணங்கள்

1. காது கேளாமை

மேற்கண்ட தென்படின் மிக முக்கியமாக செய்ய வேண்டியது செவித்திறன் பரிசோதனை துல்லியமான காது கேட்கும் திறன் குழந்தையின் பேச்சுக்கு மிக மிக முக்கியம். குழந்தையின் கேட்கும் திறன் BERA, OAE, ASS போன்ற பரிசோதனைகள் மூலம் கண்டறிய முடியும்.

கேட்கும் திறனில் நிரந்தரமாக குறைபாடு இருப்பின், சரியான காது கருவிகள் (Hearing Aids) பொருத்துவதன் மூலம் பேச்சுக் குறைபாட்டை சரி ெசய்ய முடியும்.

பிறந்தவுடன் செவித்திறன் பரிசோதனை (New Born Screening) யாருக்கு அவசியம்?

1. எடை குறைந்த பிறப்பு

2. குறை பிரசவக் குழந்தை

3. ரத்த உறவுக்குள் திருமணம் செய்தவர்கள்

4. கருவுற்றிருக்கும் போது மஞ்சள் காமாலை வந்தவர்கள்.

5. பல காரணங்களால் இன்குபேட்டரில் வைக்ப்பட்ட குழந்தை

6. பிறந்தவுடன் அழாத குழந்தைகள்.

7. பரம்பரைக் குறைபாடு உள்ளவர்கள்.

இன்ஸ்டா ஹியரிங் சொல்யூசன்ஸ், திருநெல்வேலி. செல்: 9789334719.

Mrs. தனலெட்சுமி M.Sc., Aud. (AIISH) (All India Insutitute of Speech & Hearing, Mysore)

Tags:    

Similar News