வழிபாடு

அம்மியில் மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்திய பெண் பக்தர்கள்

Published On 2022-07-04 04:53 GMT   |   Update On 2022-07-04 04:53 GMT
  • மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும்.
  • 7-ந்தேதி சுயம்பு வராகி அம்மனுக்கு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன.

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்தரகோசமங்கை கிராமத்தில் பிரசித்தி பெற்ற சுயம்பு வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மற்றும் தை வெள்ளிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அது போல் ஆண்டுதோறும் ஆஷாட நவராத்திரி திருவிழாவும் சிறப்பாக நடைபெறுவது உண்டு. அதுபோல் இந்த ஆண்டு ஆஷாட நவராத்திரி திருவிழா கடந்த 29-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

திருவிழாவின் 4-வது நாளான நேற்று கருவறையில் உள்ள மூலவரான சுயம்பு வராகி அம்மனுக்கு மஞ்சள், பால் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து சிறப்பு மகா தீபாராதனை, பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வராகி அம்மனை தரிசனம் செய்தனர்.

தற்போது ஆஷாட நவராத்திரி விழா என்பதால் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பெண்கள் அம்மியில் மஞ்சளை அரைத்து அதை அம்மனுக்கு கொடுக்கின்றனர். அதை அபிஷேகத்துக்கு பயன்படுகிறார்கள். மஞ்சள் அரைத்து வராகி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதால் மாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். வாழ்வு வளம் பெறும் என்பது பெண்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகின்ற 7-ந்தேதி அன்று சுயம்புவராகி அம்மனுக்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடைபெறுகின்றன. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராமநாதபுர சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன் தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News