வழிபாடு
திருச்செங்கோடு காஜா அகமது அலிஷா தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா
- இஸ்லாமியர்கள் சந்தனம் தடவி, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
- சந்தனக்கூடு ஊர்வலமாக தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.
மொகரம் பண்டிகையையொட்டி திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் உள்ள காஜா அகமது அலிஷா தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்தது. திருச்செங்கோடு முஸ்லிம் மஸ்ஜித் நிர்வாக கமிட்டி தலைவர் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் கமால் பாய், அப்துல் கனி, ஷாஜகான், நவாப், ஜமால் மொய்தீன், ஜமேஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இமாம் ஜலாலுதீன் பாத்தியா ஓதினார். ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சந்தனம் தடவி, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து பரம்பரைக்காரர் இதயத்துல்லா வீட்டிலிருந்து சந்தனக்கூடு ஊர்வலமாக தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. முடிவில் சமபந்தி விருந்து நடந்தது.