வழிபாடு

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இன்று மாலை யாகசாலை பூஜை தொடங்குகிறது

Published On 2022-07-04 04:34 GMT   |   Update On 2022-07-04 05:00 GMT
  • 6-ந்தேதி காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
  • இன்று மாலை 6.05 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் காலயாக பூஜை தொடங்குகிறது.

சக்தி ஸ்தலங்களில் முதன்மையானதாக திகழும் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஏழு நிலைகளை கொண்ட ராஜகோபுர கும்பாபிஷேகம் வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி யாகசாலை பூஜைக்காக ராஜகோபுரத்தின் முன்புறம் புதிதாக யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று இரவு கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. இதில் யஜமான சங்கல்பம், தேவதானுக்ஞை, விக்னேஸ் வர பூஜை, புண்ணியாக வாசனம், தனபூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹணம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் கோவில் இணை ஆணையர் கல்யாணி ராஜகோபுர கலச உபயதாரர்களான இரட்டை சகோதரர்கள் பொன்னர், சங்கர் மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.


இதைத்தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) காலை விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், பூர்ணாஹூதி, அக்னி சங்க்ரஹணம், தீர்த்த சங்க்ரஹணம் நடைபெற்றது. மாலை 6.05 மணிக்கு மேல் இரவு 8.30 மணிக்குள் முதல் காலயாக பூஜை தொடங்குகிறது.

நாளை (செவ்வாய்க்கிழமை) விக்னேஸ்வர பூஜை, புண்ணியாகவாசனம், இரண்டாம் காலயாக பூஜையும், மாலை 5.30 மணிக்கு மேல் இரவு 8 மணிக்குள் விக்னேஸ்வர வந்த பூஜை, புண்ணியாக வாசனம், மூன்றாம் கால யாக பூஜையும் நடைபெறுகிறது.

6-ந்தேதி (புதன்கிழமை) அதிகாலை 7.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம் மற்றும் நான்காம் கால யாக பூஜை நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து 6 மணிக்கு மகாபூர்ணாஹூதியும், தீபாராதனையும் நடைபெறுகிறது. அன்று காலை 6.45 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் ராஜகோபுர கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

Tags:    

Similar News