வழிபாடு

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2022-08-07 04:23 GMT   |   Update On 2022-08-07 04:23 GMT
  • ஆஞ்சநேயருக்கு நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
  • சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

இந்த கோவிலில் தினசரி சாமிக்கு அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெறும். இந்த நிலையில் நேற்று ஆடி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி ஆஞ்சநேயருக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், எண்ணெய், மஞ்சள் உள்ளிட்ட நறுமண பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மாவட்டம் மட்டும் இன்றி பிற மாவட்டம் மற்றும் மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News