வழிபாடு

திருமலையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி ஆஸ்தானம் 19-ந்தேதி நடக்கிறது

Published On 2022-08-17 07:48 GMT   |   Update On 2022-08-17 07:48 GMT
  • 20-ந்தேதி உறியடி உற்சவம் நடக்கிறது.
  • உறியடி உற்சவத்திற்காக 20-ந்தேதி ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 19-ந்தேதி கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடைபெறுகிறது. அன்று இரவு 7 மணி முதல் 9 மணி வரை கோவில் தங்க மண்டபத்தில் கோகுலாஷ்டமி ஆஸ்தானம் நடக்கிறது. இதனை முன்னிட்டு தங்க சர்வபூபால வாகனத்தில கிருஷ்ணர் எழுந்தருளி காட்சியளிக்கிறார்.

உக்கிர ஸ்ரீநிவாசமூர்த்தி, ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றும் கிருஷ்ணருக்கு ஏகாந்த திருமஞ்சனம் செய்யப்படுகிறது. 20-ந்தேதி உறியடி உற்சவம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு தங்கத்திருச்சியில் மலையப்ப சுவாமியும், மற்றொரு திருச்சியில் கிருஷ்ணரும் மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். இதற்காக 20-ந்தேதி ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News