வழிபாடு

கார்வேட்டிநகரம் வேணுகோபாலசாமி கோவிலில் தெப்போற்சவம் நாளை தொடங்குகிறது

Published On 2022-08-08 01:30 GMT   |   Update On 2022-08-08 01:31 GMT
  • வருடாந்திர தெப்போற்சவம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை நடக்கிறது.
  • தெப்போற்சவ விழாவின் 3 நாட்களிலும் வீதி உற்சவம் நடக்கிறது.

சித்தூர் மாவட்டம் கார்வேட்டிநகரத்தில் உள்ள ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் 9-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை நடக்கிறது. தற்போது கோவில் புஷ்கரணியில் புனரமைப்புப் பணி நடப்பதால் தெப்போற்சவம், புஷ்கரணியில் நடக்காமல் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உற்சவர்கள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

9-ந்தேதி சீதா, லட்சுமணர், கோதண்டராமசாமி, 10 மற்றும் 11-ந்தேதிகளில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபாலசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாடவீதிகளில உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

மேற்கண்ட 3 நாட்கள் காலை 9 மணியில் இருந்து காலை 10.30 மணி வரை ஸ்பாபன திருமஞ்சனமும், மாலை 4 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வீதி உற்சவமும் நடக்கிறது. அதையொட்டி திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் இந்து தர்மபிரசார பரிஷத் சார்பில் ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மேற்கண்ட தகவலை கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News