வழிபாடு
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம்

கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2022-01-25 04:43 GMT   |   Update On 2022-01-25 04:43 GMT
கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் முப்புடாதி அம்மன் மற்றும் கல்லகநாடி அம்மன் கோவில் தை தேரோட்ட திருவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. 13 நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் தினமும் காலை சிறப்பு பூஜைகளும், மாலையில் அம்பாள் வீதி உலாவும் நடைபெற்றன.

9-ம் நாளான நேற்று மதியம் 1.30 மணிக்கு தேரோட்டம் நடந்தது. ஓம்சக்தி, பராசக்தி கோஷங்கள் முழங்க பக்தர்கள் மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்லத்துரை தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த தேர் தென்காசி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் கோவிலை சென்றடைந்தது. தேரோட்டத்தில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் அனைத்து சமுதாயத்தினர் செய்திருந்தனர்.
Tags:    

Similar News