வழிபாடு
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பார்வேடு உற்சவம்

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பார்வேடு உற்சவம்

Published On 2022-01-18 09:53 GMT   |   Update On 2022-01-18 09:53 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இந்த ஆண்டுக்கான பார்வேடு உற்சவம் பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது. கோவில் வளாகத்தில் உற்சவர்களுக்கு ஆஸ்தானம் நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கலுக்கு மறுநாள் பார்வேடு உற்சவம் நடப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டுக்கான பார்வேடு உற்சவம் நேற்று மாலை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக நடந்தது.

அதையொட்டி நேற்று மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, கோவிந்தராஜசாமி, ஆண்டாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் இரு பல்லக்குகளில் எழுந்தருளி கோவில் விமான பிரகாரத்தில் வலம் வந்தனர். அதன்பிறகு கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவர்களுக்கு ஆஸ்தானம் நடந்தது. அதன் பிறகு உற்சவர்கள் அங்கிருந்து கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர். அதில் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News