வழிபாடு
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் அத்யாயன உற்சவம்

பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் அத்யாயன உற்சவம்

Published On 2022-01-11 04:09 GMT   |   Update On 2022-01-11 04:09 GMT
பண்ருட்டி வரதராஜ பெருமாள் கோவிலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வைகுண்டஏகாதசியையொட்டி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.
பண்ருட்டி காந்தி ரோட்டில் பிரசித்தி பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பகல் பத்து உற்சவம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

விழாவின் 8-வது நாளான நேற்று அத்யாயன உறசவம் நடந்தது. இதையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் உற்சவர் வரதராஜ பெருமாள வேணுகோபாலனாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை மறுநாள் (வியாழக்கிழமை) வைகுண்டஏகாதசியையொட்டி கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி காலை 5.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News