வழிபாடு
பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் ஐயப்ப சாமிக்கு 108 சங்காபிஷேகம்
பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் உள்ள ஐயப்பன் சன்னதியில் சங்கு ஸ்தாபனம், 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு யாக வேள்வி நடந்தது.
பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் உள்ள ஐயப்பன் சன்னதியில் நேற்று 17-ம் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 8 மணிக்கு மேல் சங்கு ஸ்தாபனம், 108 சங்காபிஷேகம் மற்றும் சிறப்பு யாக வேள்வி நடந்தது. 11 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரமும் 12 மணிக்கு மேல் மகா தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.
இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு ஐயப்பன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் பரம்பரை அறங்காவலர், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
இதில் பாண்டமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மாலை 5 மணிக்கு ஐயப்பன் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவில் பரம்பரை அறங்காவலர், அகில பாரத ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.