வழிபாடு
அய்யா வைகுண்டர்

அய்யா வைகுண்டர் கோவிலில், இன்றுதிருஏடு வாசிப்பு பெருவிழா

Published On 2021-12-31 07:07 GMT   |   Update On 2021-12-31 07:07 GMT
கோவையில் உள்ள அய்யா வைகுண்டர் திருப்பதி கோவிலில் 5-ம் ஆண்டு திருஏடு வாசிப்பு பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 16-ந்தேதிவரை நடைபெறுகிறது.
கோவை- திருச்சிரோடு ராவத்தூர் பிரிவு கண்ணம்பாளையத்தில் அய்யா வைகுண்டர் திருப்பதி கோவில் உள்ளது. இங்கு 5-ம் ஆண்டு திருஏடு வாசிப்பு பெருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த மாதம் 16-ந்தேதிவரை நடைபெறுகிறது.

தினமும் மாலை 5 மணிமுதல் இரவு 8.30 மணிவரை திருஏடு வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அடுத்த மாதம் 14-ந்தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, 16-ந்தேதி இரவு 8.30 மணிக்கு பட்டாபிஷேகம் திருஏடு வாசிப்பு நடக்கிறது என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Tags:    

Similar News