வழிபாடு
சீரடி சாய்பாபா கோவிலில் ஆங்கில புத்தாண்டு விழா
புதுவை ஸ்ரீ சீரடி சாயிபாபா நகரில் உள்ள கமல சாயி ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு விழா 1-ந் தேதி (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது.
புதுவை பல்கலைக்கழகம் எதிரில் உள்ள ஸ்ரீ சீரடி சாயிபாபா நகரில் உள்ள கமல சாயி ஆலயத்தில் ஆங்கில புத்தாண்டு விழா 1-ந் தேதி (சனிக்கிழமை) கோலாகலமாக நடைபெறவுள்ளது. காலை 6 மணிக்கு கொடியேற்றமும், 8 மணிக்கு விசேஷ அபிஷேகமும், 9 மணிக்கு பஜனை நிகழ்ச்சியும் நடக்கிறது.
பகல் 11.30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவமும், 12 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயி பஜனையும், 6 மணிக்கு ஆரத்தியும் தொடர்ந்து வழிபாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.
பகல் 11.30 மணிக்கு பாபா பல்லக்கு உற்சவமும், 12 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயி பஜனையும், 6 மணிக்கு ஆரத்தியும் தொடர்ந்து வழிபாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
அரசு அறிவுறுத்தலின்படி பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் வழிபாடு செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டு உள்ளது.