வழிபாடு
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதார பதியில் பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா

Published On 2021-12-28 06:13 GMT   |   Update On 2021-12-28 06:13 GMT
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி 17 நாட்கள் நடந்தது.
திருச்செந்தூர் கடற்கரையோரம் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில் திருஏடு வாசிப்பு திருவிழா கடந்த 10-ந் தேதி தொடங்கி 17 நாட்கள் நடந்தது.

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இதையொட்டி, அதிகாலை அவதாரபதி நடை திறக்கப்பட்டு, 6 மணிக்கு பணிவிடையும், பகல் 12 மணிக்கு உச்சிபடிப்பு பணிவிடையும் நடந்தது.

மாலையில் பேராசிரியை ஸ்ரீமதி, மகாராஜன் ஆகியோர் பட்டாபிஷேக திருஏடு வாசித்தனர். தொடர்ந்து மாலை 6 மணிக்கு அய்யா வைகுண்டர் புஷ்ப வாகனத்தில் எழுந்தருளி, அவதாரபதியை சுற்றி பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

நிகழ்ச்சியில், அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை, பொருளாளர் ராமையா நாடார், துணை தலைவர் அய்யாபழம், துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர் விஜயகுமார், இணை செயலாளர்கள் வரதராஜபெருமாள், செல்வின், ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், சுதேசன், உறுப்பினர்கள் கண்ணன், வேல்முருகன், செல்வகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News