தொட்டியம் மதுரைகாளியம்மன் கோவிலில் 21-ம் ஆண்டாக மார்கழி மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது.
பின்னர், அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்களின் தவில், நாதஸ்வர இன்னிசை கச்சேரி நடைபெற்றது. மாலை வெள்ளி ரத புறப்பாடு நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விழாக்குழுவின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தவில் மற்றும் நாதஸ்வர இசைக் கலைஞர்கள் குழுவினர் செய்திருந்தனர்.