சுவாமி பத்மகிரீஸ்வரர்-அபிராமி அம்மனுக்கு 1,008 சங்கு தீர்த்த அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் பலர் கலந்துகொண்டனர்.
இதேபோல் பட்டிவீரன்பட்டி ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் சோமவாரத்தையொட்டி, 108 சங்குகளில் புனித நீர் ஊற்றி ஓம் வடிவில் அலங்கரித்து சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து ஜோதிலிங்கேஸ்வரருக்கு 108 சங்காபிஷேகம் செய்யப்பட்டது. பின்பு சிறப்பு, அலங்காரத்தில் ஜோதிலிங்கேஸ்வர் எழுந்தருளினார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.