சோலைமலை முருகன் கோவிலில் உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு 16 வகையான அபிஷேகங்கள், சர விளக்கு தீபாராதனைகள், அலங்காரம், பூஜைகள் நடந்தன.
இதில் அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் உற்சவர் வள்ளி-தெய்வானை சமேத சுப்பிரமணிய சாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், வில்வ இலை உள்பட 16 வகையான அபிஷேகங்கள், சர விளக்கு தீபாராதனைகள், அலங்காரம், பூஜைகள் நடந்தன.
ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு நெய் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக மூலவர் சுவாமிக்கும், வித்தக விநாயகர், ஆதிவேல் சன்னதியிலும் விசேஷ பூஜைகள் நடந்தன.