வழிபாடு
சூலூர் அருகேபெரிய வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

சூலூர் அருகேபெரிய வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-12-09 06:55 GMT   |   Update On 2021-12-09 06:55 GMT
சூலூர் அருகே காடாம்பாடி கிராமம் குமாரபாளையத்தில் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
சூலூர் அருகே காடாம்பாடி கிராமம் குமாரபாளையத்தில் ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அருகே உள்ள ஸ்ரீ பெரிய வலம்புரி விநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

இதில் 30-க்கும் மேற்பட்ட புண்ணிய தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித தீர்த்தங்கள் 3 நாட்களாக யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து நேற்று 5-ம் கால யாக பூஜை முடிந்தும் கலச தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, கோபுரத்தில் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானவா்கள் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News