வழிபாடு
காட்டுமன்னார் கோவில் அருகே சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் 108 சங்காபிஷேகம்
பிரசித்தி பெற்ற ஜெகதாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்து மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
காட்டுமன்னார்கோவில் அருகே தெற்கு விருதாங்க நல்லூர் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஜெகதாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தை முன்னிட்டு கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் 108 சங்காபிஷேகம் நடைபெற்றது.
இதையொட்டி ஜெகதாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதையொட்டி ஜெகதாம்பிகை உடனுறை சொர்ணபுரீஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடந்து மகா தீபாரதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.