ஆன்மிகம்
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் 1008 சங்குகள் அலங்கரித்து வைக்கப்பட்டு சிவாச்சாரியர்கள் சங்குகளுக்கும் கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தினர்.
கீழச்சிவல்பட்டி மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு மூலவர் மற்றும் 40 பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன.
மாலை 5 மணிக்கு கோவில் மைய மண்டபத்தில் நெல்மணிகள் பரப்பப்பட்டு 1008 சங்குகள் அலங்கரித்து சிவலிங்க வடிவத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் சங்குகளுக்கும் கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் கோவில் உட்பிரகார கலச ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் அம்மனுடன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.
மாலை 5 மணிக்கு கோவில் மைய மண்டபத்தில் நெல்மணிகள் பரப்பப்பட்டு 1008 சங்குகள் அலங்கரித்து சிவலிங்க வடிவத்தில் வைக்கப்பட்டது. தொடர்ந்து சிவாச்சாரியர்கள் சங்குகளுக்கும் கலசங்களுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தினர். பின்னர் கோவில் உட்பிரகார கலச ஊர்வலம் நடைபெற்றது.
தொடர்ந்து உற்சவர் அம்மனுடன் ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.