ஆன்மிகம்
ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை காலசம்ஹார பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை அடுத்த தாடகை மலை அடிவாரம் ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை காலசம்ஹார பைரவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலசம்ஹார பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.