ஆன்மிகம்
சுடலைமாடசாமி

பரப்புவிளை மலையசாமி கோவில் கொடை விழா நாளை தொடங்குகிறது

Published On 2021-10-27 05:52 GMT   |   Update On 2021-10-27 05:52 GMT
என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள பரப்புவிளை மலையசாமி கோவில் கொடை விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது.
என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள பரப்புவிளை மலையசாமி கோவில் கொடை விழா நாளை (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாட்கள் நடக்கிறது. நாளை அதிகாலை 5 மணிக்கு இசை தட்டு, காலை 8 மணிக்கு தீர்த்தம் கொண்டு வருதல், 9 மணிக்கு அபிஷேகம், இரவு 7 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு சாஸ்தாவுக்கு தீபாராதனை நடக்கிறது.

29-ந்தேதி காலை 9 மணிக்கு வில்லிசை, மதியம் 1.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு வில்லிசை, 6.30 மணிக்கு காலசாமிக்கு தீபாராதனை, 30-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு வில்லிசை, தொடர்ந்து ஊட்டு படைப்பு, மலையசாமி மற்றும் சிவசுடலைமாடசாமிக்கு தீபாராதனை, அன்னதானம் ஆகியவை நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் அய்யப்பன் தலைமையில் ஊர் நிர்வாகிகள், விழாக்குழுவினர், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News