ஆன்மிகம்
அஸ்வினி நட்சத்திரத்தையொட்டி திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அஸ்வினி நட்சத்திரத்தை முன்னிட்டு சுவாமிக்கு பால், வாசனை திரவியங்கள், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.
மிகவும் பிரசித்தி பெற்ற திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் அஸ்வினி நட்சத்திரத்தில் தான் அன்னாபிஷேகம் நடக்கும். அதன்படி நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. இதையொட்டி சுவாமிக்கு பால், வாசனை திரவியங்கள், தயிர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சீர்காழி அருகே உள்ள பிரசித்தி பெற்ற தென்னங்குடி சிவலோகநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதில் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடகிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் சீர்காழி அருகே உள்ள பிரசித்தி பெற்ற தென்னங்குடி சிவலோகநாதர் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது.
இதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.