ஆன்மிகம்
திருவிளக்கு பூஜை

சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2021-10-22 05:07 GMT   |   Update On 2021-10-22 05:07 GMT
திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி ஊராட்சியில் அய்யப்ப சேவா சமாஜம், புறநகர் தமிழ் வளர்ச்சிப் பிரிவு ஆகியவை சார்பில் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
திருப்பரங்குன்றம் அருகே உள்ள ஆஸ்டின்பட்டி ஊராட்சியில் அய்யப்ப சேவா சமாஜம், புறநகர் தமிழ் வளர்ச்சிப் பிரிவு ஆகியவை சார்பில் சக்தி மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது. இந்த விளக்கு பூஜையை குருஜி சிவப்பிரசாத் தொடங்கி வைத்தார்.

இதில் தமிழ் வளர்ச்சிப் பிரிவு மாவட்ட தலைவர் ராஜசேகரன், துணைத்தலைவர்கள் ராஜேஷ், சரிதா, மாவட்டச்செயலாளர் ராஜாராம், அரசு வக்கீல் ராஜசிம்மன், மாவட்டசெயற்குழு உறுப்பினர் முத்துராக்கு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News