ஆன்மிகம்
பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-10-18 09:19 GMT   |   Update On 2021-10-18 09:19 GMT
பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடந்தன. சாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
காட்பாடி பிரம்மபுரம் சஞ்சீவிராயர் மலையில் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் உள்ளது. இது மிகவும் பழமை வாய்ந்த கோவிலாகும்.

இங்கு பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பூஜைகள் நடந்தன. சாமிக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.

வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களைத் திறக்கலாம் என அரசு அனுமதித்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் முக கவசம் அணிந்த, சமூக இடைவெளியை கடைபிடித்தபடி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோயில் திருப்பணி குழு தலைவர் ஆர்.சுந்தரராஜி செய்திருந்தார்.
Tags:    

Similar News