ஆன்மிகம்
விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள்

ஸ்ரீகாளஹஸ்தி கோவில் சார்பில் விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு பட்டு வஸ்திரங்கள், பூஜை பொருட்கள்

Published On 2021-10-15 06:23 GMT   |   Update On 2021-10-15 06:23 GMT
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தனர்.
ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின்போது பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்கள் சமர்ப்பணம் செய்வது வழக்கம்.

அதேபோல் இந்த ஆண்டுக்கான நவராத்திரி பிரம்மோற்சவ விழாவையொட்டி விஜயவாடா கனக துர்க்கையம்மனுக்கு நேற்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் சார்பில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு பட்டு வஸ்திரங்கள் மற்றும் பூஜை பொருட்களை சமர்ப்பணம் செய்தார்.

அப்போது சிவன் கோவில் வேத பண்டிதர்கள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News