ஆன்மிகம்
செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் சிறப்பு யாகம் இன்று நடக்கிறது
செம்பியவரம்பல் சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் இன்று (புதன்கிழமை) அஷ்டமியை முன்னிட்டு சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகம் சரவண குருக்கள் தலைமையில் நடக்கிறது.
கும்பகோணம் அருகே செம்பியவரம்பல் கிராமத்தில் உள்ள சொர்ணாகர்ஷண பைரவர் கோவிலில் அஷ்ட பைரவர்கள் அருள்பாலித்து வருகிறார்கள். இங்கு அஷ்டமி தோறும் சிறப்பு யாகம் நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இன்று (புதன்கிழமை) அஷ்டமியை முன்னிட்டு சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகம் சரவண குருக்கள் தலைமையில் நடக்கிறது. யாகத்தை தொடர்ந்து கடம் புறப்பாடு மற்றும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு புனித நீர் அபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பரமசிவ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
அதன்படி இன்று (புதன்கிழமை) அஷ்டமியை முன்னிட்டு சொர்ணாகர்ஷண பைரவருக்கு சிறப்பு யாகம் சரவண குருக்கள் தலைமையில் நடக்கிறது. யாகத்தை தொடர்ந்து கடம் புறப்பாடு மற்றும் சொர்ணாகர்ஷண பைரவருக்கு புனித நீர் அபிஷேகம் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பரமசிவ சிவாச்சாரியார் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.