ஆன்மிகம்
சுப்பிரமணிய சுவாமி

திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமிக்கு சஷ்டி பூஜை

Published On 2021-10-12 08:36 GMT   |   Update On 2021-10-12 08:36 GMT
திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத சஷ்டியையொட்டி முருக பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது.
நத்தம் அருகே திருமலைக்கேணியில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு புரட்டாசி மாத சஷ்டி பூஜை நடந்தது. அதையொட்டி முருக பெருமானுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடந்தது.

இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் அருகிலுள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

இதேபோல் நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவில் உள்பிரகாரத்தில் அமைந்துள்ள தண்டபாணி சன்னதியில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
Tags:    

Similar News