ஆன்மிகம்
முளைப்பாரி எடுத்து பெண்கள் நேர்த்திக்கடன்
முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தில் செல்லி அம்மன் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
முதுகுளத்தூர் அருகே செல்வநாயகபுரத்தில் செல்லி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் விழா நடந்தது. இதையொட்டி விரதம் இருந்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
ஆண்கள் கும்மிபாட்டு பாடி, ஒயிலாட்டம் நடனம் ஆடி பின்தொடர்ந்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோவிலில் முளைப்பாரியை வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி பெண்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
ஆண்கள் கும்மிபாட்டு பாடி, ஒயிலாட்டம் நடனம் ஆடி பின்தொடர்ந்தனர். 3 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோவிலில் முளைப்பாரியை வைத்து நேர்த்திக்கடனை நிறைவேற்றி பெண்கள் வழிபட்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.