ஆன்மிகம்
தேய்பிறை அஷ்டமி:காலசம்ஹார பைரவருக்கு சிறப்பு பூஜை
பொள்ளாச்சி அங்கலகுறிச்சியை அடுத்த சமுக்தியாம்பிகை காலசம்ஹார பைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.
பொள்ளாச்சி அருகே உள்ள அங்கலகுறிச்சியை அடுத்த தாடகை மலையடிவாரம் ஆத்மநாதவனத்தில் சமுக்தியாம்பிகை காலசம்ஹார பைரவர் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலசம்ஹார பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த கோவிலில் தேய்பிறை அஷ்டமியையொட்டி நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் காலசம்ஹார பைரவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.