ஆன்மிகம்
சிம்மவாகன கால சம்கார பைரவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த காட்சி.

நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு

Published On 2021-09-30 07:35 GMT   |   Update On 2021-09-30 07:35 GMT
நாகை பகுதி சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது.
நாகை பகுதிகளில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று புரட்டாசிமாத தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் குளக்கரையில் தனி சன்னதி கொண்டுள்ள சிம்மவாகன காலசம்கார பைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து சாமிக்கு திரவிய பொடி, மஞ்சள், மாப்பொடி, பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், பன்னீர், கரும்பு சாறு, விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர் பைரவருக்கு வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. அதேபோல் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள காலபைரவருக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் நாகூரில் உள்ள சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் கோவில், திருவாய்மூர் தியாகராஜர் கோவிலில் உள்ள அஷ்ட பைரவர், வாய்மேட்டை அடுத்த தகட்டூரில் உள்ள பைரவர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Tags:    

Similar News