ஆன்மிகம்
முத்தாரம்மன்

உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா

Published On 2021-09-28 04:54 GMT   |   Update On 2021-09-28 04:54 GMT
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழாவை முன்னிட்டு இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது.
உடன்குடி பெருமாள்புரம் முத்தாரம்மன் கோவில் கொடை விழா நேற்று வருசாபிஷேக யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. திருவிளக்கு பூஜை, வில்லிசை, மாக்காப்பு தீபாராதனையும், தொடர்ந்து கும்பம் எடுத்து பவனிவருதலும் நடந்தது.

இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு வாண வேடிக்கையுடன் முளைப்பாரி ஊர்வலம் நடக்கிறது. நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு மஞ்சள்பெட்டி பவனி, இரவு 9 மணிக்கு மாவிளக்கு பவனியும், சிறப்பு பூஜையும் நடைபெறும்.

வருகிற 30-ந் தேதி காலை 9 மணிக்கு கொடை விழா நிறைவு பூஜையுடன் பிரசாதம் வழங்கப்படும்.
Tags:    

Similar News