ஆன்மிகம்
சாய்பாபா

திருக்கடையூர் சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு

Published On 2021-09-24 05:56 GMT   |   Update On 2021-09-24 05:56 GMT
திருக்கடையூர் சீரடி சாய்பாபா கோவிலில் சாய்பாபாவுக்கு பழவகைகள், இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
திருக்கடையூரில் சீரடி சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் வியாழக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக சீரடி சாய்பாபாவுக்கு அபிஷேகம் நடந்தது.

இதனை தொடர்ந்து பழவகைகள், இனிப்புகள் மற்றும் மலர் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News