ஆன்மிகம்
விநாயகர்

பண்ருட்டி அருகே பால விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2021-09-22 06:27 GMT   |   Update On 2021-09-22 06:27 GMT
பண்ருட்டி அருகே கருக்கை கிராமத்தில் உள்ள பாலவிநாயகர் கோவிலில் நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன.
பண்ருட்டி அருகே கருக்கை கிராமத்தில் பாலவிநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் புனரமைக்கப்பட்டு நாளை (வியாழக்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி நாளை காலை சிறப்பு யாக சாலை பூஜைகள் நடைபெற உள்ளன.

தொடர்ந்து யாக சாலையில் இருந்து மேள, தாளம் முழங்க கடம் புறப்பட்டு சென்று 9 மணியில் இருந்து 10.30 மணிக்குள் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பொதுமக்கள், ஊர் முக்கியஸ்தர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News