ஆன்மிகம்
சித்தர் முத்துவடுகநாதருக்கு வராகி அலங்காரம்

சித்தர் முத்துவடுகநாதருக்கு வராகி அலங்காரம்

Published On 2021-09-22 06:02 GMT   |   Update On 2021-09-22 06:02 GMT
முத்துவடுகநாதர் சுவாமிக்கு வராகி அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
சிங்கம்புணரி வேங்கைப்பட்டி சாலையில் உள்ள சித்தர் முத்துவடுகநாதர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பவுர்ணமி விழா நடைபெற்றது. இதையொட்டி பால், பன்னீர், விபூதி, உள்ளிட்ட 21 வகையான திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

அதன்பிறகு வராகி அலங்காரம் செய்யப்பட்டு மலர் மாலைகள் அணிவித்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து சாமி தரிசனம் செய்தனர். முடிவில் பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகிக்கப்பட்டது.
Tags:    

Similar News