ஆன்மிகம்
திருப்பதி கோவிந்தராஜசாமி

திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் பவித்ரோற்சவம் நிறைவு

Published On 2021-09-20 08:48 GMT   |   Update On 2021-09-20 08:48 GMT
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி உற்சவர்களுக்கும், மூலவர்களுக்கும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் நடந்து வந்தது. நேற்று முன்தினம் பவித்ரோற்சவம் நிறைவடைந்தது.

அதையொட்டி காலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத கோவிந்தராஜசாமி உற்சவர்களுக்கும், மூலவர்களுக்கும் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது. அதைத்தொடர்ந்து இரவு 7.30 மணியில் இருந்து இரவு 9.30 மணி வரை பவித்ர பூர்ணாஹுதி, பிரபந்த சத்துமுறை, வேத சத்துமுறை ஆகியவை நடந்தது.

அதில் பெரிய ஜீயர் சுவாமி, சின்ன ஜீயர் சுவாமி, சிறப்பு நிலை துணை அதிகாரி ராஜேந்திரடு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News