ஆன்மிகம்
வெண்ணந்தூரில் முனியப்பன் கோவில் திருவிழா
வெண்ணந்தூர் எல்லை பகுதியில் உள்ள 5 முனியப்பன் கோவில் திருவிழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. அதைத்தொடர்த்து கோழி, சேவல், கிடா வெட்டுதல் நடந்தது.
வெண்ணந்தூர் எல்லை பகுதியில் உள்ள 5 முனியப்பன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் ஆவணி மாதம் கடைசி வியாழக்கிழமை நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா நோய் பரவல் காரணமாக கோவில் திருவிழா நடைபெறவில்லை.
இந்த ஆண்டு முனியப்பன் கோவிலில் நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி மாலையில் முடிவடைந்தது. காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதையடுத்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்த்து கோழி, சேவல், கிடா வெட்டுதல் நடந்தது.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்த ஆண்டு முனியப்பன் கோவிலில் நேற்று அதிகாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கி மாலையில் முடிவடைந்தது. காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதையடுத்து பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். அதைத்தொடர்த்து கோழி, சேவல், கிடா வெட்டுதல் நடந்தது.
இந்த திருவிழாவில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.