ஆன்மிகம்
தேரழந்தூரில் ஆமருவி பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
குத்தாலத்தை அடுத்த தேரழந்தூரில் ஆமருவிபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
குத்தாலத்தை அடுத்த தேரழந்தூரில் ஆமருவிபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சனிப்பிரதோஷத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதை முன்னிட்டு சாமி மற்றும் அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றது.
பின்னர் உற்சவர்கள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி, மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
பின்னர் உற்சவர்கள் வசந்த மண்டபத்திற்கு எழுந்தருளினர். அங்கு பால், பன்னீர், இளநீர், திரவிய பொடி, மஞ்சள், சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.