ஆன்மிகம்
மகா மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

திருக்குவளை அருகே மகா மாரியம்மனுக்கு சந்தனகாப்பு அலங்காரம்

Published On 2021-09-06 04:47 GMT   |   Update On 2021-09-06 04:47 GMT
திருக்குவளை மகா மாரியம்மனுக்கு பல்வேறு காய்-கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்கார செய்யப்பட்டது.
திருக்குவளை அருகே உள்ள காருகுடியில் திருக்குவளை- கொளப்பாடு பிரதான சாலையில் மகா மாரியம்மன் மற்றும் நாகம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.

இதை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு காய்-கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அம்மனுக்கு சந்தனகாப்பு அலங்கார செய்யப்பட்டது.
Tags:    

Similar News