ஆன்மிகம்
சுந்தரராஜப் பெருமாள்

சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் உறி அடிக்கும் நிகழ்ச்சி

Published On 2021-09-03 06:02 GMT   |   Update On 2021-09-03 06:02 GMT
பரமக்குடியில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கோவிலின் முன்பு உறி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பரமக்குடியில் உள்ள சுந்தரராஜப் பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. அதையொட்டி வேதாத்யன சபையினரால் கிருஷ்ண யாகம் நடத்தப்பட்டது. பின்பு ஹோமங்கள் நிறைவடைந்து தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

இரவு சுந்தரராஜ பெருமாள் சேஷ வாகனத்தில் கிருஷ்ண அவதாரத்தில் அலங்காரமாகி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் கோவிலின் முன்பு உறி அடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் டிரஸ்டிகள் செய்து இருந்தனர்.
Tags:    

Similar News