ஆன்மிகம்
துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

Published On 2021-09-01 05:08 GMT   |   Update On 2021-09-01 05:08 GMT
கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் மண்டல பூஜை 47 நாட்கள் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.
கிருஷ்ணகிரியை அடுத்த துறிஞ்சிப்பட்டி கிராமத்தில் பொன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. இதை தொடர்ந்து மண்டல பூஜை 47 நாட்கள் நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் மண்டல பூஜை நிறைவு நாள் விழா நடந்தது.

இந்த விழாவையொட்டி பெண்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது. அதை தொடர்ந்து அம்மன் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.

விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News