ஆன்மிகம்
தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
தோப்புத்துறை வனதுர்க்கை அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யபட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
வேதாரண்யத்தை அடுத்த தோப்புத்துறை வனதுர்க்கை அம்மன் கோவில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக புனித நீர் அடங்கிய கலசங்களை வைத்து பூஜை செய்து யாகம் வளர்க்கப்பட்டது. இதை தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்கள் எடுத்து செல்லப்பட்டு அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள் செய்யபட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக. இதில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
இதேபோல வேதாரண்யம் மேலவீதியில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் சுவாமி மடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னி சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்ட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வேதாரண்யம் வேம்ப தேவன்காடு தெற்கு பகுதி உள்ள மவுன சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோல வேதாரண்யம் மேலவீதியில் அமைந்துள்ள மாணிக்கவாசகர் சுவாமி மடத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதை முன்னி சுவாமி மலர்களால் அலங்கரிக்கப்ட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. வேதாரண்யம் வேம்ப தேவன்காடு தெற்கு பகுதி உள்ள மவுன சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜை நடந்தது.