ஆன்மிகம்
மாரியம்மன்

வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம்

Published On 2021-08-16 04:33 GMT   |   Update On 2021-08-16 04:33 GMT
வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
வேதாரண்யம் நாட்டு மடம் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறும். அதுமட்டும் இன்றி ஒவ்வொரு தமிழ் மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெறுவது வழக்கம்.

ஆடி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையொட்டி நேற்று அம்மனுக்கு பல்வேறு திரவியங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

பின்னர் அம்மனுக்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
Tags:    

Similar News