ஆன்மிகம்
பரமத்திவேலூர் அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம்
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
பரமத்திவேலூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாத கடைசி வெள்ளியையொட்டி சிறப்பு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம் நடைபெற்றது.
அதன்படி நன்செய் இடையாறு மாரியம்மன், பரமத்திவேலூரில் உள்ள மகா மாரியம்மன், கொங்களம்மன், எல்லையம்மன், பேட்டை புதுமாரியம்மன், பகவதியம்மன், பரமத்தி அங்காளம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன் உள்ளிட்ட அம்மன் கோவில்களில் பால் அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை.