ஆன்மிகம்
திருவிளக்கு பூஜை

சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை

Published On 2021-08-09 08:33 GMT   |   Update On 2021-08-09 08:33 GMT
சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தலைஞாயிறை அடுத்த உம்பளச்சேரி சமயபுரத்து மாரியம்மன் கோவிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு கொரோனா தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டி திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக சாமிக்கு பால், பன்னீர், விபூதி, இளநீர், திரவியம், நெய், சந்தனம், ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்று கோவிலின் எதிரே உள்ள மகா மண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News