ஆன்மிகம்
குறிஞ்சிப்பாடி அருகே நவசக்தி மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள நவசக்தி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
குறிஞ்சிப்பாடி அருகே சின்னதானங்குப்பத்தில் நவசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடி மாத திருவிழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி செடல் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.
அதனை தொடர்ந்து கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இரவு 9 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதிஉலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 30-ந்தேதி செடல் திருவிழா நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து வருகின்றனர்.