ஆன்மிகம்
அக்ரஹாரம் பாண்டுரங்க ருக்மணி கோவிலில் சிறப்பு பூஜை

அக்ரஹாரம் பாண்டுரங்க ருக்மணி கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-07-26 06:44 GMT   |   Update On 2021-07-26 06:44 GMT
அக்ரஹாரம் பாண்டுரங்க ருக்மணி கோவிலில் ஆஷாட சுத்த ஏகாதசி சப்தா விழாவையொட்டி நேற்று பாண்டுரங்கர், ருக்மணி அம்பாள் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கிருஷ்ணகிரியை அடுத்த அக்ரஹாரம் கிராமத்தில் உள்ள பாண்டுரங்க ருக்மணி கோவிலில், ஆண்டு தோறும் ஆஷாட சுத்த ஏகாதசி சப்தா விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 85-வது ஆண்டு விழா கடந்த 20-ந் தேதி தொடங்கியது.

இதையொட்டி தொடர்ந்து 7 நாட்கள் சாமிக்கு அபிஷேகமும், அலங்காரமும் நடைபெற்றது. இவ்விழாவையொட்டி நேற்று பாண்டுரங்கர், ருக்மணி அம்பாள் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று (திங்கட்கிழமை) விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News